search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்கவாசல் திறப்பு"

    • சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
    • சொர்க்கவாசல் வழியாக வரதராஜ பெருமாள் வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தருமபுரி, 

    தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தருமபுரி கோட்டை பரவாசு தேவ சுவாமி கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

    பூக்கலால் அலங்க ரிக்கபட்ட பல்லக்கில் பரவாசுதேவர் தம்பதி சமேத பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசுதேவ சுவாமியை வனங்கி வழிபட்டனர்.

    அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது.

    தருமபுரி சுற்றுள்ள கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.

    சொர்க்க வாசல் திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல காரிமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    காரிமங்கலம் கடைவீதி, அக்ரஹாரம் லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது.

    பின்னர் 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து அருள் பெற்று சென்றனர்.

    மேலும் இன்று மாலை 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், நாளை துவாதசி சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    அரூர்

    அரூர் பரசுராமன் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

    ஆண்டுதோறும் பிரதானமாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழா. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

    இன்று அதிகாலை சொக்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் 5 மணிக்கு வரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன.

    மேலும் சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயார் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    இதைத்தொடர்ந்து வரதராஜ பெருமாளை பக்தர்கள் தூக்கி கோவிலை சுற்றி வந்து சொர்க்கவாசல் வழியாக வரதராஜ பெருமாள் வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாராயணா சுவாமி கோவில் சொர்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

    பூக்கலால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் ஸ்ரீ லட்சுமி நாராயணார் தம்பதி சமித பரமபத சொர்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டவாறு நீண்ட வரிசையில் சென்று பரவாசு சுவாமியை வனங்கி வழிபட்டனர். அதனை தொடர்ந்து திருவீதி உலா நடைபெறுகிறது.

    அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் அன்னதானம் வழங்கபட்டது. அதகபாடியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். 

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
    • கோவில் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில் ஒன்றாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று, சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.

    மேலும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதன் இரு அரக்கர்களுக்கு மோட்சமளிக்க மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும்

    அப்போது பெருமாளிடத்தல் அசுரர்கள் இந்நாளன்று இந்த வாசல் வழியே பெருமாள் வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தங்களுக்கு கிடைத்தது போலா மோட்சம் கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

    இப்பெரும் புராணம் வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு பெருவிழா இன்று பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நடைபெற்றது. மேலும் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள இக் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்கள் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

    பள்ளிகொண்டாவில் உள்ள உத்திர அரங்கநாதர் கோவிலில் ஒரு இரவு தங்கினாலே போதும் மோட்சம் கிடைக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளதாக ஆன்மிக பெரியவர்கள் கூறுகின்றனர்.

    இந்தக் கோவிலில் கருவறையில் அரங்கநாதர் ஆதிசேஷன் மீது சங்கு சக்கரதாரியாக பெரிய அழகு திருமேனியுடன் ஆகிருதியாக நிமிர்ந்து படுத்து தெற்கில் சிரசும் வடக்கே திருப்பாதங்களும் வைத்து யோக சயனமூர்த்தியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளார்.

    சொர்க்க வாசல் திறப்பு

    இதனை முன்னிட்டு இன்று காலை 4 மணிக்கு மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 5 மணிக்கு உற்சவர் புஷ்ப அலங்காரமும், ஆயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷங்களுடன் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் சேவை நடைபெற்றது. இதனையடுத்து கருட வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

    2 ஆண்டுகள் கழித்து எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பக்தர்களின் வசதிக்காக வேலூர், குடியாத்தம், ஆம்பூரில் இருந்து பள்ளிகொண்டாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழா ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் நித்தியா, ஆய்வாளர் சுரேஷ்குமார், கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் ஒடுகத்தூர் அருகே உள்ள குருவராஜா பாளையம் கிராமத்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான மலையப்பசுவாமி எனும் ஸ்ரீ தர்மகொண்ட ராஜா கோயிலிலும் சொர்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்த்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆம்பூர்

    ஆம்பூர் துத்திப்பட்டு பிந்து மாதவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    வைகுந்த வாசல் வழியாக பிந்து மாதவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என கரகோஷம் எழுப்பினர். அதைதொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்தது
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    திருப்பாற்கடல்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சோளிங்கர்:

    108 திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கர் பகுதி அமைந்துள்ள யோக லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    பக்த்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வெளிவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவரும் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வெளியே வரும் போது கோவிந்தா என கோஷம் எழுப்பினர்.

    இதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தோசித்த பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாட்டை திருக்கோயில் இந்து அறநிலைத்துறை உதவி ஆணையாளர் ஜெயா செய்திருந்தார்.

    • சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது
    • சிறப்பு அபிஷேகம் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் சன்னதி பின்புறம் உள்ள வேணுகோபால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டன. பின்பு சாமிக்கு வெள்ளிக்க வசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வைகுந்த வாயில் வழியாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மகா தீபார தனை செய்யப்பட்டது.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் ஆண்டு தோறும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார்களால் அதிகாலை முதல் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பாண்டுரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதையடுத்து ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பாற்கடல் சயன திருக்கோலம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ பாண்டு ரங்கனுக்கு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கண்ணமங்கலம் லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிஅளவில் சொர்க்க வாசல் வழியாக ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது.

    இதைமுன்னிட்டு கோயில் வளாகத்தில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்ப ட்டிருந்தது.ஒண்ணுபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.

    போளூர் பெருமாள் கோவிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் போளூர் அருகே குன்னத்தூரில் பெருமாள் கோவிலில் அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

    செங்கம்

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் சொர்க்கவாசல் நடை திறக்கும்ம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

    இந்த வருடமும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் நடை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேணு கோபால பார்த்தசாரதி திருக்கோவில் பிரகாரத்தில் சொர்க்கவாசல் நடை திறந்து ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி உற்சவர் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடும் குளிரிலும் பெருமாள் கோவில் வளாகத்தில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இஞ்சிமேடு

    திருவண்ணாமலை, மாவட்டம் இஞ்சிமேடு, கிராமத்தில் உள்ள வரதராஜ, பெருமாள் கோவிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதேசி விழா நடந்தது. காலையில் வரதராஜ, பெருமாள் பெருந்தேவி, தாயார் சக்கரத்தாழ்வார், சீதாதேவி, லட்சுமி நரசிம்மர், ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு திருமஞ்சனம் செய்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    கோவில் மண்டபத்தில் பல்வேறு வண்ண மலர்களால் சொர்க்கவாசல் போல் அலங்காரம் செய்து வைத்து. பெருந்தேவி, தாயார் சமேத வரதராஜ, பெருமாளுக்கு பல்வேறு பண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து. பாலாஜி, பட்டர் தலைமையில் 11 பட்டர்கள் லட்சதீப ஆராதனை செய்து வைத்து. பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள், ஆண்கள், காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சொர்க்கவாசல், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரதராஜ, பெருமாள் பெருந்தேவி, தாயாரை சாமி தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சடகோப கைங்கரிய சபா நிர்வாகிகள் பாலாஜி, வேங்கடநாதன், பட்டர்கள் செய்திருந்தனர்.

    • மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது.
    • இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    சேலம்:

    மேச்சேரி ஏறகுண்டப்பட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாட்டியாலயாவின் பாரத நடன நிகழ்ச்சியும், 10 மணி முதல் பஜனையும் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 2.45 மணிக்கு திருமஞ்சனம் நீராட்டல் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரமும் 4.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்பு 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.

    அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சுகுமார்-வனிதா மணியம்மாள் சாரிட்டபிள் டிரஸ்ட் அறக்கட்டளைதாரர் மற்றும் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
    • அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பூதேவி,சமேத ஸ்ரீ அலமேலு உடனுறை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சாமி கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று.


    காட்டூர் பாண்டுரங்கர் கோவில்

    காட்டூர் பாண்டுரங்கர் கோவில்

    அதன் பின்னர் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டு, அதன் வழியாக சுவாமி பல்லக்கில் எடுத்துவரப்பட்டார். அப்பொழுது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அதிகாலை முதலே பெரு மாளை தரிசனம் செய்து வருகின்றனர். ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா மணிகண்டன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

    குமாரபாளையம்

    வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதி காலையில் குமாரபா ளையத்தில் உள்ள பெரு மாள் கோவில்களில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், காட்டூர் பாண்டுரங்கர் கோவில், கோட்டை மேடு பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பரமபத வாசல் வழியே சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்க ளுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராசிபுரம்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பொன் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் முத்தங்கி கவச அலங்காரத்தில் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டபடி, பெருமாளை வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். பொன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஜனகல்யாண் இயக்கம் சார்பில் அதன் தலைவர் பரந்தாமன், செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

    • சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை உலக நன்மைக்காக ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து நம்மாழ்வார் வரவேற்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வாசலுக்கு முன்பு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா நாராயணா, என்று கோஷமிட்டனர்.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலை வலம் வந்து தீவட்டி ஊர்வலத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. அதிகாலை என்பதால் பக்தர்களுக்கு சுவாமி உருவம் கூட தெரியவில்லை. உபயதாரர் சிவஞானம்பிள்ளை குடும்பத்தினர் பிரசாதம் வழங்கினர். நவநீத கிருஷ்ணானந்த கொண்டல்ரவ்த் பாண்டுரங்க பஜனை குழுவினர், சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் பஜனைக் குழுவினர் பக்திப் பாடல்கள் பாடி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

    • 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கோவை ராமர் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி 5 சனிக்கிழமைகள், மாசிமக தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    கடந்த 2 வருடங்களாக வைகுண்ட ஏகாதசி விழா அரசின் கொேரான விதிமுறைகளை பின்பற்றி நடந்தது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது.

    அன்று காலை திருமொழிதிருநாள் தொடக்கம் என்னும் பகல்பத்து உற்சவம் ஆரம்பமானது. தொடர்ந்து திருவாய் மொழித்திறன் தொடக்கம் எனப்படும் ராப்பத்து உற்சவமும் தொடங்க உள்ளது.இந்த திருவிழா வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    9-ம் நாளான நேற்று அரங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நாளை சிகர நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கோவை, காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண கோவிலுக்கு வர உள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறியதாவது:- நடப்பாண்டில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ளதால் முக கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளி பக்தர்கள் வசதிக்காக சக்கர நாற்காலிகள் தயாராக உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடங்குகிறது. இதனையொட்டி மூலவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் நாளை மறுநாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைெபறுகிறது.

    ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜ பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதேபோன்று பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர்

    கோவில், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவை சீனிவாச பெருமாள் கோவில், கோவை ராமர் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    • இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்குகிறது.
    • பகல்பத்து உற்சவம் 23-ந்தேதி முதல் தொடங்கி 2023 ஜனவரி 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    திருச்சி,

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்றாலும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக விழாவையொட்டி, ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று (14-ந்தேதி, திங்கட்கிழமை) மதியம் 12 மணி முதல் 12.30 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள், பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி தொடங்குகிறது.

    அதனையடுத்து பகல்பத்து உற்சவம் 23-ந்தேதி முதல் தொடங்கி 2023 ஜனவரி 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். பகல் பத்து முதல் நாளன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வருவார். அன்று அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.

    பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (1.1.2023) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    2.1.2023 (திங்கட்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். அன்றைய தினம் அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத் தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    ராப்பத்து ஏழாம் திருநாளான 8.1.2023 அன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 9.1.2023 அன்று திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 10.1.2023 அன்று தீர்த்தவாரியும், 11.1.2023 அன்று நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். அத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

    ×